தொழில்துறையின் மானிய கடன் வழங்கக்கோரி நரிக்குறவர் சமூகத்தினர் மனு!

பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாய பெண்கள் தங்களது தொழிலான ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: தொழில்துறையின் மானிய கடன் வழங்க வலியுறுத்தி ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பல்லடம் தாலுகா ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குறவர் காலனியில் 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஊசி, பாசி மாலை, மணி ஆகியவை தயார் செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு நடந்தும், வாகனங்களிலும் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...