கோவை ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே தூமனூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை வனச்சரகம் ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காப்பு காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் இறந்த பெண் யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
மேலும் இறந்த பெண் யானைக்கு சுமார் 26 முதல் 29 வயது இருக்கும் என்றும், இறைப்பை மற்றும் சிறு குடலில் உணவு ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.
இதன் மூலம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட யானை சில நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும் இதயமும் வீக்கமடைத்த நிலையில் உயிரிழந்துள்ளது.
கூடுதல் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் குறுந்தந்தங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை வனச்சரகம் ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காப்பு காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் இறந்த பெண் யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
மேலும் இறந்த பெண் யானைக்கு சுமார் 26 முதல் 29 வயது இருக்கும் என்றும், இறைப்பை மற்றும் சிறு குடலில் உணவு ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.
இதன் மூலம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட யானை சில நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும் இதயமும் வீக்கமடைத்த நிலையில் உயிரிழந்துள்ளது.
கூடுதல் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் குறுந்தந்தங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.