ரூ.50 துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே திமுக ஆட்சியின் நேர்மை நிர்வாகத்திற்கு உதாரணம்!

திருப்பூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என கூறினார்.



திருப்பூர்: ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 



விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 



ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, 







தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் அரசு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறது. பாட்டில் முதல் டம்ளர் வரை அனைத்திலும் ஊழல் செய்யும் திமுக அரசை மக்கள் அப்புறப்படுத்துவதற்கு தொடக்க போராட்டமாக இந்நாளை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுக ஆட்சியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும். திருப்பூர் மாநகராட்சியில் 50 ரூபாய் மதிப்புள்ள துடைப்பத்தை 440க்கு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சி நிர்வாகம் வாங்கி இருப்பதன் மூலம் மாநகராட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதுபோல அனைத்து வகையிலும் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...