கோவையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில நாட்களாக கடும வெயில் சுட்டெரித்தது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் வெயில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தொட்டே இருந்தது. பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் வரட்சி ஏற்பட்டு கோவையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதல் மாவட்டத்தின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. உக்கடம்,சிங்காநல்லூர், காந்திபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலில் தற்போது மழை பெய்து வருவது கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் புருக்பாண்ட் பாலத்தின் அடியில் குப்பை கழிவுகள் அடைத்துக்கொண்டு இருப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியிருக்கிறது.. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..


இந்த நிலையில், இன்று காலை முதல் மாவட்டத்தின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. உக்கடம்,சிங்காநல்லூர், காந்திபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலில் தற்போது மழை பெய்து வருவது கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் புருக்பாண்ட் பாலத்தின் அடியில் குப்பை கழிவுகள் அடைத்துக்கொண்டு இருப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியிருக்கிறது.. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..

