கோவை திருச்சி சாலையில் துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

கோவை திருச்சி சாலையில் அடுத்தடுத்து இருந்த துணிக்கடை, கார் உதிரி பாகங்கள் விற்பனையகம் மற்றும் டயர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.



கோவை திருச்சி சாலையில் சங்கர் என்பவருக்கு சொந்தமான துணிகள் மற்றும் கைத்தறி பொருட்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 10 மணியளவில் கடை திறக்கப்படுவதற்கு முன்பாக கடையில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

5 வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அக்கடையின் அருகில் இருந்த இண்டோ கார்ஸ் என்ற கார் உதிரிபாகங்கள் விற்பனையகம் மற்றும் சுந்தரம் டயர்ஸ் என்ற டயர்கள் விற்பனை கடையிலும் தீ வேகமாக பரவியது கண்டறியப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் அக்கட்டிட உரிமையாளர் புகழேந்தி, கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீபாவளி விற்பனைபோக மீதமான பட்டாசுகளை அங்கு சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த சில பட்டாசுகள் வெடித்து சாலையில் வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீவிபத்தில் துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், கார் உதிரிபாக விற்பனையகத்தில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீயே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் அதிர்ஸ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாத போதும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...