புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் நெடுவாசல் போராட்ட குழுவிற்கு ஆதரவாக அக்கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 60 பேர் கலந்து கொண்ட இப்போராட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரையில் தொடர்ந்து நடக்கும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் நெடுவாசல் போராட்ட குழுவிற்கு ஆதரவாக அக்கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 60 பேர் கலந்து கொண்ட இப்போராட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரையில் தொடர்ந்து நடக்கும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.