பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் - நடத்துனர் கூறுவது என்ன?

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை, நான் வேலையை விட்டு போகிறேன் என கூறிவிட்டு சென்றதாக அதே பேருந்தில் வேலை பார்த்து வந்த பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பேருந்து நடத்துனர் ஷர்மிளா தாமாகவே வேலையை விட்டு செல்வதாக கூறியதாக பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் தெரிவித்துள்ளார். 

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் குறித்து பேருந்தில் இருந்த பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் கூறியதாவது, 

நான் பயிற்சி நடத்துனராக இருக்கிறேன். இன்று கனிமொழி எம்பி வந்தார். நான் அவரிடம் இது போன்று நடத்துனர் பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்து பயண சீட்டிற்கு காசு கேட்டேன். அப்போது ஷர்மிளா நீங்கள் ஒன்றும், காசு தர வேண்டாம் நான் எடுக்கிறேன் எனது அப்பா தருவார் என்று கூறினார். 

அப்போது நான் கனிமொழி அவர்களுக்கு எதற்கு செலவு வைக்க வேண்டும் என்று நினைத்து நமது கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணி அவரிடம் பயணச்சீட்டுக்கு காசு கேட்டேன். அப்போது கனிமொழி சிரித்துக்கொண்டே எனது உதவியாளர் தருவார் என்று கூறினார். 

அப்போது இரண்டு நபர்கள் 120 ரூபாய் கொடுத்துவிட்டு ஆறு பயணச்சீட்டு வாங்கினார்கள். பிறகு பேருந்தில் கனிமொழியிடம், முதல்வர் அப்பா நன்றாக உள்ளாரா எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று பேசினேன். அப்போது கனிமொழி எம்பி, எல்லோராலும் மக்கள் பணி செய்ய முடியும் அதற்கு சான்றாகத்தான் சர்மிளா விளங்குகிறார் என்று கூறினார். 

பிறகு கனிமொழியும் ஷர்மிளாவும் இறங்கிவிட்டனர். அதனைத் தொடர்ந்து வேறு ஒரு ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். பேருந்து சோமனூர் சென்று வந்த பிறகு மீண்டும் இறங்கிய இடத்திலேயே ஷர்மிளா ஏறினார். பிறகு திடீரென்று நான் பேருந்தில் இருந்து இறங்குகிறேன் எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்று கத்தினார். 

உடனடியாக நான் ஷர்மிளாவிடம் என்னால் தான் இறங்குகிறாயா என்று அவரிடம் நானாக பலமுறை மன்னிப்பு கேட்டேன். அப்போது அவர் உங்களுக்கும் எனக்கும் எந்தவித பேச்சும் கிடையாது என்று என்னிடம் தெரிவித்தார். 

அப்போது கூட நான் அவரிடம் என்னால் நீங்கள் இறங்கினால் எனது வேலை பறி போய்விடும் எனவே உங்களுடைய கண் பார்வையை மீறி இனி நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினேன். 

அப்போது ஷர்மிளா என்னிடம் நீங்கள் சுயநலமாக பேசுகிறீர்களா உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக நான் இறங்காமல் இருக்க வேண்டுமா. எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை நான் அலுவலகத்தில் சென்று பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...