கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் அனைத்து பூசாரிகள் சங்கத்தினர் பல வருடங்களாக வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வந்தனர்.

ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இன்று மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடவுள் வேடமணிந்த பூசாரிகள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் பூசாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இன்று மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடவுள் வேடமணிந்த பூசாரிகள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் பூசாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.