கடிதம் எழுதிய கோவை சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கோவையை சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் ஜெய் பிரணவ் என்ற சிறுவன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், பல்வேறு பணிகளுக்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனை பாராட்டியதுடன், அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார்.



கோவை: தனக்கு கடிதம் எழுதிய கோவையை சேர்ந்த சிறுவனை பாராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார். 



கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த ஜெய் பிரணவ் என்ற 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பதில் அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 



இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக இன்று கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுவன் ஜெய் பிரணவுடன் சிற்றுண்டி அருந்தினார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார். பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது, அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அந்த பதிவில் சிறுவன் எழுதிய கடிதம் மற்றும் சிறுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...