கடிதம் எழுதிய கோவை சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கோவையை சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் ஜெய் பிரணவ் என்ற சிறுவன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், பல்வேறு பணிகளுக்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனை பாராட்டியதுடன், அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார்.



கோவை: தனக்கு கடிதம் எழுதிய கோவையை சேர்ந்த சிறுவனை பாராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தார். 



கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த ஜெய் பிரணவ் என்ற 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பதில் அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 



இந்நிலையில், பல்வேறு பணிகளுக்காக இன்று கோவைக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுவன் ஜெய் பிரணவுடன் சிற்றுண்டி அருந்தினார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார். பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது, அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அந்த பதிவில் சிறுவன் எழுதிய கடிதம் மற்றும் சிறுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...