காதர்பேட்டை பனியன் சந்தை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மேயர் நேரில் ஆறுதல்!

காதர்பேட்டை பனியன் சந்தையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த தீவிபத்து குறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களை மாநகராட்சி மேயர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காதர் பேட்டை பனியன் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது. 



சுமார் ஒரு கோடி ருபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் தீ விபத்து நடந்த இடத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 



அதனை தொடர்ந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எந்தெந்த உதவிகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்து தருவதாக வணிகர்களுக்கு உறுதி அளித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...