கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 32 மருத்துவர் பணியிடங்கள் வரும் மாதத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், வரும் மாதத்திலேயே காலி இடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்கள் காலி பணியிடங்களும் வரும் மாதத்தில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 



இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2017 எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்த 101 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்லூரி முதல்வர் எங்களிடம் கேட்டார். காலி பணியிடம் நிரப்புவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்களது கோரிக்கைகள் நிறைவேற உள்ளது, வரும் மாதத்திலேயே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...