தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான ஆணழகன் மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி நடைபெற்றது.



இப்போட்டியில் பங்கேற்க சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, சிவகாசி, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52, 60, 75 மற்றும் 90 மேல் ஆகிய எடை பிரிவில் 180 வீரர்கள் கலந்து கொண்டனர். அதேப்போல் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56, 66 மற்றும் 85 மேல் உள்ள எடை பிரிவில் 120 பேர் கலந்து கொண்டனர்.



பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்வேந்தன் 100 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 60 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் 95 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.

75 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த குமார் 135 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 90 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த தௌபிக் அகமது 137.5 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.



அதேபோல், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த புவனேஸ்வரன் முதல் பரிசை பெற்றார். இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்வேந்தன், மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில தி.மு.க இளைஞர் அணி தலைவர் பைந்தமிழ் பாரி பரிசுகளை வழங்கினார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...