கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்க சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, சிவகாசி, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் நடைபெற்ற இந்த பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52, 60, 75 மற்றும் 90 மேல் ஆகிய எடை பிரிவில் 180 வீரர்கள் கலந்து கொண்டனர். அதேப்போல் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56, 66 மற்றும் 85 மேல் உள்ள எடை பிரிவில் 120 பேர் கலந்து கொண்டனர்.

பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்வேந்தன் 100 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 60 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் 95 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.
75 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த குமார் 135 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 90 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த தௌபிக் அகமது 137.5 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.

அதேபோல், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த புவனேஸ்வரன் முதல் பரிசை பெற்றார். இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்வேந்தன், மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில தி.மு.க இளைஞர் அணி தலைவர் பைந்தமிழ் பாரி பரிசுகளை வழங்கினார்.


இப்போட்டியில் பங்கேற்க சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, சிவகாசி, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் நடைபெற்ற இந்த பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52, 60, 75 மற்றும் 90 மேல் ஆகிய எடை பிரிவில் 180 வீரர்கள் கலந்து கொண்டனர். அதேப்போல் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56, 66 மற்றும் 85 மேல் உள்ள எடை பிரிவில் 120 பேர் கலந்து கொண்டனர்.

பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்வேந்தன் 100 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 60 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் 95 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.
75 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த குமார் 135 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 90 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த தௌபிக் அகமது 137.5 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.

அதேபோல், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த புவனேஸ்வரன் முதல் பரிசை பெற்றார். இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்வேந்தன், மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில தி.மு.க இளைஞர் அணி தலைவர் பைந்தமிழ் பாரி பரிசுகளை வழங்கினார்.
