பீளமேடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்துக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. மேம்பாலப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பீளமேடு அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும், கருப்புக் கொடி கட்டுவது, உண்ணாவிரதம், அறப்போராட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டும் தற்போது வரை அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைப் போன்றே உள்ளது.

மேலும், பீளமேடு ரயில் பாதைக்கு முன்புறத்தில் எஸ்ஏஐஎல் என்னும் நிறுவனம் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகளங்கள் தற்போதுள்ள சர்வீஸ் சாலையில் வந்து செல்வதால் சாலை எழிதில் பழுதடைவதுடன் பொதுமக்களுக்கும் பெருமளவில் இடையூறாக உள்ளது.

எனவே, இந்த எஸ்ஏஐஎல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். மேலும், உடனடியாக பீளமேடு மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும்' என இன்று அதிமுக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, பீளமேடு கன்சியூமர் வாய்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...