திருப்பூரில் ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் முதல்முறையாக 2 பெட்ரூம் வீடு 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது!

திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் 25 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் 25 அடிக்கு ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் நகர்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் முதன் முதலாக வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் ஹைட்ராலிக் சிப்டிங் என்கிற உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து நகர்த்தும் செயல் முறையின் படி 2 பெட்ரூம் உள்ள கட்டிடத்தை 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டு கட்டடத்தை நகர்த்தும் பணியில் இதற்கென பிரத்யேகமாக பணிபுரியும் கட்டுமான வல்லுனர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை நகர்த்துவதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் பழைய தூண்களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு புதிய அடித்தளத்தின் புதுத்தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்படுகின்றது.



அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு 8 அடி வீதம், 3 நாட்களுக்கு 24 அடி தூரம் நகர்த்தப்படுகிறது.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோவில்கள், 5 மாடி கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நகர்த்தியும், உயர்த்தியும் விடலாம் என கூறுகின்றனர்.

புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவை காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என செய்தியாளர்கள் சந்திப்பில் குமரன் டெமாலிசர்ஸ் நிறுவனர் பொன்லிங்கம் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...