திருப்பூரில் ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் முதல்முறையாக 2 பெட்ரூம் வீடு 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது!

திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் 25 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் 25 அடிக்கு ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் நகர்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் முதன் முதலாக வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் ஹைட்ராலிக் சிப்டிங் என்கிற உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து நகர்த்தும் செயல் முறையின் படி 2 பெட்ரூம் உள்ள கட்டிடத்தை 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டு கட்டடத்தை நகர்த்தும் பணியில் இதற்கென பிரத்யேகமாக பணிபுரியும் கட்டுமான வல்லுனர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை நகர்த்துவதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் பழைய தூண்களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு புதிய அடித்தளத்தின் புதுத்தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்படுகின்றது.



அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு 8 அடி வீதம், 3 நாட்களுக்கு 24 அடி தூரம் நகர்த்தப்படுகிறது.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோவில்கள், 5 மாடி கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நகர்த்தியும், உயர்த்தியும் விடலாம் என கூறுகின்றனர்.

புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவை காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என செய்தியாளர்கள் சந்திப்பில் குமரன் டெமாலிசர்ஸ் நிறுவனர் பொன்லிங்கம் தெரிவித்தார்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...