காடா துணி விற்பனை செய்யும் நிறுவனங்களில் ரூ.10 கோடி வரை நூதன மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது!

பல்லடம் அருகே காடா துணி விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்களில் நூதன முறையில் ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட மகுடீஸ்வரன் மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே காடா துணி விற்பனை நிறுவனங்களில் நூதன முறையில் ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதியானது காடா துணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பகுதியாகும். இப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் இருந்து பேல் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு காடா துணி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்ற நபர் இப்பகுதியில் ஹோல்சேல் வியாபாரத்திற்கு துணிகளை ஏற்றுமதிக்கு பல நிறுவனங்களில் வரவு, செலவு செய்து நம்பகத்தன்மை ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த நம்பிக்கையை பயன்படுத்தி 10 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதில் பாதிக்கப்பட்ட பலரும் பல்லடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, டெக்ஸ்டைல்ஸ் வியாபாரங்களை பொருத்தவரை காடா துணிகளை இடைத்தரகர்கள் மற்றும் நேரடி ஏற்றுமதியும் நடைபெறுவது வாடிக்கை.



இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பலரின் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் தான் வியாபாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனது தந்தையின் தொடர் செயலான இத்தொழிலை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறி முதலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் இரண்டு மாதம் வரவு செலவுகளை நன்றாக செய்து நம்ப வைத்துள்ளார்.

பிறகு வேன் மற்றும் லாரி ஆட்டோ போன்ற வாகனங்களில் காடா துணிகளை மீட்டர் கணக்கில் விலை பேசி பாதி பணம் கொடுத்து விட்டு, மீதி பணம் கொண்டு சென்ற பிறகு இரண்டு நாளில் கொடுப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும், லட்சக் கணக்கில் தனது தாய் மலர்கொடி மற்றும் மகுடீஸ்வரன் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட காசோலையை கொடுத்து ஒரே சமயத்தில் பல நிறுவனங்களை இதே பாணியில் ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆறு மாதமாகவே ஏமாற்றப்பட்ட பலரும் தங்களால் முடிந்த நடவடிக்கை மேற்கொண்டு தங்களுடைய பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் வழக்கு தொடர்ந்து அதற்கான பிடியானை பெற்று பல்லடம் காவல் நிலையத்தில் இன்று பல்லடம் போலீசார் தாய் மற்றும் மகுடீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர்.



இதனை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள் திடீரென அனைவரும் ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று ஒரே நாளில் இவர் மீது மோசடி புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

திடீரென நடைபெற்ற போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து பல்லடம் போலீசார் தாய் மகன் ஆகிய இருவரையும் கைது செய்து பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...