தேசிய மருத்துவர்கள் தினம் - கோவை அரசு மருத்துவமனையில் உற்சாக கொண்டாட்டம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூலை 1 தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவத்துறையில் பி சி ராயின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.



மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் இருப்பது போன்று போடப்பட்டிருந்த கோலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



இதையடுத்து பயிற்சி மருவத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.



இதை தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...