கோவை மாவட்டம், தாளியூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் மருத்துவமனை கழிவு நீரினை மழை நீர் வடிகால் மூலம் ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், தாளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஓனாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து கழிவு நீரானது இரவு நேரங்களில் அருகில் உள்ள மழை நீர் வடிகாலின் மூலம் திறந்து விடப்படுகிறது.
அந்த நீரானது மழை நீர் வடிகாலின் மூலம் வந்து கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஓடையில் கலக்கின்றது.
அது, கலிங்கநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட வார்டு எண் 7, 4 மற்றும் 18 ஆகிய வார்டு மக்கள் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையில் சென்று நொய்யல் ஆற்றை அடைகிறது.
மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை, வருவாய் துறையினரால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று அங்கு துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகின்றது.
எனவே, அந்த தனியார் நிறுவனங்களின் கழிவு நீரை ஓடையில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், தாளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஓனாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து கழிவு நீரானது இரவு நேரங்களில் அருகில் உள்ள மழை நீர் வடிகாலின் மூலம் திறந்து விடப்படுகிறது.
அந்த நீரானது மழை நீர் வடிகாலின் மூலம் வந்து கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஓடையில் கலக்கின்றது.
அது, கலிங்கநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட வார்டு எண் 7, 4 மற்றும் 18 ஆகிய வார்டு மக்கள் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையில் சென்று நொய்யல் ஆற்றை அடைகிறது.
மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை, வருவாய் துறையினரால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று அங்கு துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகின்றது.
எனவே, அந்த தனியார் நிறுவனங்களின் கழிவு நீரை ஓடையில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.