தனியார் குடியிருப்பு மற்றும் மருத்துவமனை கழிவு நீரை ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தாளியூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் மருத்துவமனை கழிவு நீரினை மழை நீர் வடிகால் மூலம் ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தாளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஓனாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து கழிவு நீரானது இரவு நேரங்களில் அருகில் உள்ள மழை நீர் வடிகாலின் மூலம் திறந்து விடப்படுகிறது.

அந்த நீரானது மழை நீர் வடிகாலின் மூலம் வந்து கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஓடையில் கலக்கின்றது.

அது, கலிங்கநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட வார்டு எண் 7, 4 மற்றும் 18 ஆகிய வார்டு மக்கள் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையில் சென்று நொய்யல் ஆற்றை அடைகிறது.

மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை, வருவாய் துறையினரால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று அங்கு துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகின்றது.

எனவே, அந்த தனியார் நிறுவனங்களின் கழிவு நீரை ஓடையில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...