திருப்பூர் அருகே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

காங்கேயம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.



திருப்பூர்: காங்கேயம் அருகே இயங்கி வரும் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் கண்ணன் மற்றும் நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், வாடகைக்கு பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை, பனியன் வேஸ்ட் குடோன் இயங்கி வருகிறது.

இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஞயிறு விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை.



இந்த நிலையில் இந்த பனியன் நிறுவனத்தின் பின்பகுதியில் உள்ள வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



தீ மளமளவென பரவிய நிலையில், அருகிலிருந்த பனியன் நிறுவனத்தில் ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள், பின்னலாடை இயந்திரங்களும் தீக்கிரையாகின.



இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.



இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், 3 தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் சேதமானது. இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு காரணங்களா என நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...