அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் - பாஜக மனு!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெரியநாயக்கன்பாளையம் பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அம்ருத் 2.0 திட்டம் குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் பாஜக நகர மண்டல தலைவர் மகேந்திர ராஜ் தலைமையில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்த சமூக வலைத்தளமான "நம்ம பெரியநாயக்கன் பாளையம்" என்ற முகநூலில் பணிகள் தொடங்கியுள்ளது என்ற செய்தி ஒன்றாம் தேதி அன்று வெளியாகி உள்ளது.

இந்தத் திட்டத்தை பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக தொடக்க விழாவோ பூமி பூஜையோ நடத்தப்படவில்லை, அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை அதன் மதிப்பீடும் தெரியப்படவில்லை.

இந்த திட்டமானது எப்பொழுது துவங்கப்படும்? இத்திட்டம் மத்திய அரசின் திட்டமா அல்லது மாநில அரசின் திட்டமா என்று மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை எனவும் இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...