ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்த்தில் மூழ்கி இளைஞர் பலி!

கோவை ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வைசாக் (24) என்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடலை கைப்பற்றிய தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டன் என்பவரது மகன் வைசாக் (24). இவர் கோவையில் உள்ள தனியார் பிபிஓ ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வைசாக் தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள கார்னிஷ் ரிசார்ட் என்ற தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த போது, வைசாக்கிற்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் வைசாக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...