சோமையம்பாளையம் துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைக்க கோரி அகில பாரத மக்கள் கட்சி மனு!

சோமையம்பாளையம் அடுத்த கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து, பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் இருப்பதால், அதனை சீரமைக்க கோரி அகில பாரத கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமையம்பாளையம் அருகேயுள்ள துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் போதிய பாதுகாப்பின்றி பழுதடைந்து இடிந்து நிலையில் உள்ளது.

மேலும், அங்குள்ள கழிவு நீர் தொட்டி மற்றும் கழிவறையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுத்து அதனை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து தர வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர், அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...