மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வேண்டும் - அதிமுக உறுப்பினர்கள் திருப்பூர் மேயரிடம் கோரிக்கை மனு!

மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.



திருப்பூர்: மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரி சம்பந்தமான சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குப்பை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை குறித்து மேல்முறையீட்டு குழு அமைக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...