‘நான்‌ எப்போதும்‌ உங்களுக்காகவே இருக்கிறேன்‌’ - ஈஷா நிறுவனர் சத்குருவின்‌ குரு பெளர்ணமி வாழ்த்து செய்தி!

குரு பௌர்ணமி தினத்தையொட்டி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உயிர் மூச்சு, முக்திக்கு நோக்கம் என என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும்‌ எடுத்து கொள்ளலாம்‌. ஆனால்‌, நான்‌ எப்போதுமே உங்களுக்காக தான்‌ இருக்கிறேன்‌. என கூறியுள்ளார்.



கோவை: நான்‌ எப்போதுமே உங்களுக்காக தான்‌ இருக்கிறேன்‌ என குரு பௌர்ணமியையொட்டி பக்தர்களுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக முக்கியத்துவம்‌ வாய்ந்த குரு பெளர்ணமி தினமான நேற்றைய தினம் சத்குரு,‌ அனைவருக்கும்‌ தன்‌ அருளாசிகளை வழங்கியுள்ளார்‌. இதுதொடர்பாக அவர்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌ கூறியிருப்பதாவது,

சத்குரு, உங்கள்‌ இதய துடிப்பாக இருக்க முடியும்‌, உங்கள்‌ உயிர்‌ மூச்சாக இருக்க முடியும்‌ அல்லது உங்கள்‌ முக்திக்கு நோக்கமாகவும்‌ இருக்க முடியும்‌. உங்கள்‌ விருப்பம்‌, நீங்கள்‌ என்னை எப்படி வேண்டுமென்றாலும்‌ எடுத்து கொள்ளலாம்‌. ஆனால்‌, நான்‌ எப்போதுமே உங்களுக்காக தான்‌ இருக்கிறேன்‌. இவ்வாறு கூறியுள்ளார்‌.

நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ ஆன்மீக பாதையில்‌ இருப்பவர்களுக்கு குருவின்‌ தேவையும்‌, அவரின்‌ வழிகாட்டுதலும்‌ மிகவும்‌ அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில்‌ சத்குரு ஜக்கி வாசுதேவ், சம காலத்தில்‌ உலகெங்கும்‌ உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு குருவாக விளங்குகிறார்‌.

குரு பெளர்ணமியை முன்னிட்டு சத்குருவின்‌ அன்பளிப்பாக, 'உயிர்‌ நோக்கம்‌' என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ்‌ மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஆன்லைன்‌ வாயிலாக ஜூலை 7 முதல்‌ ஜூலை 9 வரை 3 நாட்கள்‌ நடைபெறும்‌ இந்த யோகா வகுப்பில்‌ பஞ்ச பூதங்களின்‌ உதவியுடன்‌ ஒருவர்‌ தனது உடல்‌ மற்றும்‌ மன நலத்தை மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வழிமுறைகள்‌ கற்றுக்‌ கொடுக்கப்படும்‌.

இவ்வகுப்பில்‌ பங்கேற்க Isha.co/unosm என்ற இணையதள முகவரியில்‌ ஜூலை 4-ம்‌ தேதி நள்ளிரவுக்குள்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...