கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில், அதிக குளிர் நிலவி வருகிறது.
அதிக மழையின் காரணமாக பொது மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால் இரண்டாவது நாளாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.