கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அருகே உள்ள பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த காத்திருக்க போராட்டத்தை தமிழ்நாடு உழவர் தினமான இன்று விவசாயிகளுக்காக உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தி விவசாய சங்க தலைவர் ஈசன் முருகசாமி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசன் முருகசாமி பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டமானது 18 மாவட்டங்களில் தமிழக பாதுகாப்பு விவசாய சங்கம் சார்பில் நடைபெறுகிறது.
கொப்பரை தேங்காய் விலை நிர்ணயம், பாமாயிலுக்கு பதிலாக நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் கள் இறக்குவதற்கும் அனுமதி ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து அரசு செயல்படுத்த வேண்டும்.
உரிய இழப்பீடு வழங்க வேண்டும் பால் முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களைப் போல விவசாய பொருள்களை தமிழகத்திலும் விற்பனை செய்ய வேண்டும்.
அரசு எங்களை அழைத்துப் பேசி வார்த்தை நடத்தினால் இது போன்ற போராட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண பயன்படுத்திக் கொள்வோம். இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.