கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சீரான போக்குவரத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவருடன் மாநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் காவல் துறையினர் சென்றனர்.

அப்போது திருச்சி சாலை சுங்கம், சுங்கம் மேம்பாலம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சந்திப்பு, காந்திபுரம் பேருந்து நிலையம் சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர், போக்குவரத்து சீராக செல்வதற்கும், சிக்னல்கள் பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவருடன் மாநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் காவல் துறையினர் சென்றனர்.
அப்போது திருச்சி சாலை சுங்கம், சுங்கம் மேம்பாலம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சந்திப்பு, காந்திபுரம் பேருந்து நிலையம் சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர், போக்குவரத்து சீராக செல்வதற்கும், சிக்னல்கள் பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.