தாராபுரம் விஸ்வேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை சுற்றிய பாம்புக்கு பால் ஊற்றிய பக்தர்கள்!

தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை சுற்றி படுத்திருந்த ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பிற்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்ட நிலையில், பால் ஊற்றியவர்களை பாம்பு கடிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றிய பாம்பை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கோவிலுக்குள் ரத்த மண்டல வகையை சேர்ந்த பாம்பு ஒன்று செல்வதை கண்ட சிலர், உள்ளே சென்று பார்த்த பொழுது.



அந்த பாம்பு கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றியபடி படுத்துக் கொண்டிருந்தது.



இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சுவாமியை சுற்றி படுத்திருந்த பாம்பிற்கு பால் ஊற்றி வணங்கினர்.



சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்ல துவங்கியது.



இதனையடுத்து அப்போது மக்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்தப் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பைப்பிற்குள் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.



லிங்கத்தை சுற்றிய பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...