ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் - அமைச்சர் சு.முத்துச்சாமி பங்கேற்பு!

கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று பெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வீட்டு வசதி நகர் புறம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...