கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 32-வது வார்டுக்கு உட்பட்ட விசுவாசபுரம் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் ஆய்வு செய்தார்.


பின், விளாங்குறிச்சி பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நகர்நல மையக் கட்டிட பணிகளையும், ஜீவா நகர் மற்றும் உதயா நகர் பகுதியில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகாட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் ஆய்வு செய்தார்.


பின், விளாங்குறிச்சி பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நகர்நல மையக் கட்டிட பணிகளையும், ஜீவா நகர் மற்றும் உதயா நகர் பகுதியில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகாட்சி அலுவலர்கள் உள்ளனர்.