கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் ஆறு மதுபான கடைகளை அங்கிருந்து அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: இருகூர் பேரூராட்சியில் பகுதியில் உள்ள 6 மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் இருகூரில் உள்ள ஒண்டிப்புதூர் மேம்பாலம், ஏ.ஜி புதூர் சாலை, சின்னியம்பாளையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் மது அருந்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் முன் மது பிரியர்கள் படுத்து உறங்குவதுடன் தகாத வார்த்தைகளில் அவர்களை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் இருகூரில் உள்ள ஒண்டிப்புதூர் மேம்பாலம், ஏ.ஜி புதூர் சாலை, சின்னியம்பாளையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் மது அருந்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் முன் மது பிரியர்கள் படுத்து உறங்குவதுடன் தகாத வார்த்தைகளில் அவர்களை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.