கோவை இருகூர் பேரூராட்சியில் உள்ள மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு!

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் ஆறு மதுபான கடைகளை அங்கிருந்து அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இருகூர் பேரூராட்சியில் பகுதியில் உள்ள 6 மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள ஒண்டிப்புதூர் மேம்பாலம், ஏ.ஜி புதூர் சாலை, சின்னியம்பாளையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் மது அருந்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் முன் மது பிரியர்கள் படுத்து உறங்குவதுடன் தகாத வார்த்தைகளில் அவர்களை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...