கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்ற வேன் தாராபுரம் அருகே கவிழ்ந்து விபத்து - 16 பெண்கள் காயம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்து வேன்கள் மூலம் 100 பேர் தாராபுரம் வழியாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற போது ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பெண்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்து வேன்களில் 100 க்கும் மேற்பட்டோர் சீர்காழியிலிருந்து மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மோதுப்பட்டி பகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் - அவிநாசி பாளையம் நான்கு வழிச்சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.



இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.



இதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.



விபத்தை நேரில் பார்த்த விவசாயி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து நான்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் 16 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



காயமடைந்த நபர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...