உடுமலை அருகே பாம்பு கடித்து மலை கிராமப் பெண் காயம்!

உடுமலை அடுத்துள்ள குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் இயற்கையான முறையில் பசுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குழிப்பட்டி மலை கிராமத்தில் பெண்ணை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பெண்ணை கட்டுவீரியன் பாம்பு நேற்று இரவு கடித்து விட்டது. இந்த நிலையில் பாம்பு கடித்த பெண்ணை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர பாதை இல்லை.



இதன் காரணமாக இயற்கையான முறையில் பசுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பகுதியில் ஒரு சில நேரங்களில் காட்டு யானைகள் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் குழிபட்டியில் இருந்து உடுமலைக்கு வர தற்பொழுது காடம்பாறை ஆழியாறு ஆனைமலை வழியாக வந்தால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது.

ஆனால் குழிப்பட்டியில் திருமூர்த்தி மலைக்கு வனப்பகுதியில் பாதை அமைத்து கொடுத்தால் ஏராளமான மலைவாழ் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிப்பட்டி மாவடைப்பு உள்ளிட்ட மலை கிராமமக்கள் உடுமலைக்கு எளிதாக வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...