திருப்பூரில் தப்பிச்செல்ல முயன்ற தலைமறைவு குற்றவாளியை விரட்டிப்பிடித்த காவலர் - சிசிடிவி காட்சி வெளியீடு!

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன், திருப்பூர் ரயில் நிலையம் அருகே தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் ஒருவர் அவரை விரட்டி பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் விரட்டி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் விரட்டி பிடித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், கடந்த 2003ஆம் ஆண்டு அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் 2013 ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் பாஸ்கரனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் பாஸ்கரன் திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு அவரை பிடிக்க சென்றபோது போலீசாரை பார்த்த பாஸ்கரன் தப்பிச் செல்ல முயற்சித்தபோது அனுப்பர்பாளையம் காவலர் காளியப்பன் துரத்திச்சென்று பாஸ்கரனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.



இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...