முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில், கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில், 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மருத்துவ முகாம், பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல், கோவை தேர் நிலைத்திடலில், கோவை மாநகர் மாவட்டம், பெரிய கடைவீதி பகுதி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில்., தையல் எந்திரம், சேலை, மிக்ஸி, ஐயன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் 5 ஆயிரம் பேருக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நா.கார்த்திக் கூறியதாவது,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம், மிக்ஸி, கிரைண்டர், ஐயன்பாக்ஸ், சேலை என பயன் உள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் அனைத்து பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவோம்.
பாஜகவை சேர்ந்தவர்கள் வாய்க்கு வந்தபடி உளறி வருவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் உள்ளோம்.
பாஜகவினர், மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள், நாங்கள் அப்படி இல்லை. ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி மக்கள் பணி செய்வதோடு மட்டுமின்றி, மக்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.