தவறவிட்ட பணத்தை உடனடியாக உரியவரிடம் ஒப்படைத்த இளம்பெண் - பல்லடம் போலீசார் பாராட்டு!

பல்லடம் அடுத்த என்.ஜீ.ஆர் சாலையில் தபால் நிலைய ஊழியர் குணசேகரன் என்பவர் தவறவிட்ட ரூ. 1.1 லட்சம் பணத்தை கண்டெடுத்து, அதனை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த த பிரியா என்ற இளம்பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே தபால் நிலைய ஊழியர் தவறவிட்ட ரூ.1.1 லட்சம் பணத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலையத்தில், இளவந்தி பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர், வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது தான் சேமித்து வைத்த 1 லட்சத்து பத்தாயிரம் ரூபாயை பணத்தை துணி பையில் எடுத்து வைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது என்ஜீஆர் சாலையில் செல்லும் போது வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கும் போது வாகனத்தில் வைத்திருந்த துணி பை சாலையில் விழுந்துள்ளது.



இந்நிலையில் என்ஜீஆர் சாலை வழியாக வந்து கொண்டிருந்த சின்னிய கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா என்ற இளம்பெண், கீழே கிடந்த துணி பையை எடுத்து பார்க்கும் போது 1 லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆதார் போன்ற அடையாளம் அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதனையடுத்து பிரியா உடனடியாக இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும் அடையாள அட்டையில் உள்ள மொபைல் நம்பருக்கு துணி பையை தவற விட்டது குறித்து தகவல் அளித்தார்.

இந்நிலையில் அங்கு வந்த போலீசார் பிரியாவிடம் உள்ள பணத்தை பெற்று குணசேகரனிடம் ஒப்படைத்தனர். பல்லடம் பிரதான சாலையில் தபால் நிலைய ஊழியர் தவற விட்ட பணத்தை இளம்பெண் கண்டெடுத்து போலீசார் மூலமாக ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...