தாராபுரத்தில் நகை வாங்குவது போல் தங்க வளையல்களை திருடிச்சென்ற 3 பெண்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

தாராபுரம் அமராவதி சிலை அருகே செயல்பட்டு வரும் நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்த 3 பெண்கள், 12 கிராம் தங்க வளையல்களை திருடிச்சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரத்தில் நகை கடையில் 3 பெண்கள் நகை வாங்குவது போல் வந்து தங்க வளையல்களை திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே (தயா கோல்ட்) தனியார் பெயரில் தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி, பிற்பகல் 3 மணியளவில் 3 பெண்கள் நகை கடைக்கு வந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது டாலர் பிடிக்கவில்லை வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12,கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை காண்பித்துள்ளார்.



அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். இதனையடுத்து, மற்ற 2 பெண்களும் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரை கேட்டுள்ளனர்.

அதற்காக ஷோகேசில் வைத்திருந்த வேறு தங்க வளையல்களை நகை கடைக்காரர் காண்பித்துள்ளார்.



அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக கிளம்பிச் சென்றார்.



அதன்பிறகு மீதம் இருந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

மூன்று பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ் இல் அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்கள் மட்டும் காணவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது மூன்று பேரும் நகை கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை தேடிச் சென்றார் ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகை கடைக்காரர்கள் உஷாராக இருங்கள் எங்களது நகை கடையில் மூன்று பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரை நேரில் விசாரித்து வருகின்றனர்.

தாராபுரத்தில் பட்டப்பகலில் 3 பெண்கள் தங்க வளையல்களை நூதனமாக திருடிச்சென்ற சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...