சட்டப்பேரவை தேர்தலில் 5,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தந்த தங்களை பாஜக கண்டுகொள்ளவில்லை எனக்கூறி தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர்: தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் உட்பட சுமார் 5000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவராக இருப்பவர் கண்ணம்மாள். கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் ருத்ராவதி பாஜவுக்கு ருத்ராவதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் வராததற்கு கண்டனம் தெரிவித்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் கூறியதாவது, எனது தலைமையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 5,000க்கும் அதிகப்படியான வாக்குகளை பாஜகவுக்கு பெற்று கொடுத்துள்ளோம்.
இந்தப் பேரூராட்சியில் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், கட்சித் தலைமை இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை.
அதனால், ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் மற்றும் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பாஜகவின் முதலாவது பேரூராட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள 4000க்கும் மேற்பட்டோர் வேறு கட்சியில் இணைய உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.