ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம்


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவர் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலிதாவின் மரணத்தில் மர்மம்  இருப்பதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமாதியின் அருகே செய்தியாளர்களைச் சந்தித்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சசிகலா அணியினரால் தான் தாக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அ தி மு க அணியானது சசிகலா தரப்பு மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.



இதனைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் ஓபிஎஸ் அணியினர், இன்று கோவை சிவானந்தா காலனியில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், 

முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், நடிகர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...