திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட பூ மார்க்கெட் வசதியாக இல்லை - வியாபாரிகள் குற்றச்சாட்டு!

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பூ மார்க்கெட் வசதியாக இல்லை என குற்றம்சாட்டியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே கடை வைத்துள்ள இடத்திலேயே மார்க்கெட்டை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பூ மார்க்கெட் வசதியாக இல்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் பழைய மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுவதற்காக இடிக்கப்பட்ட நிலையில் அங்கு செயல்பட்டு வந்த கடைகள் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.



இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே இருந்த கடையின் அளவைவிட குறைவான இட வசதியுடன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்களின் கூட்டத்திற்கு ஏற்றவாறு புதிய பூ மார்க்கெட் இல்லாத நிலையில் அங்கே கடைகள் அமைக்கும் பட்சத்தில் ஏராளமான இடையூறுகள் ஏற்படும் என்பதால் தாங்கள் தற்போது செயல்படும் இடத்திலேயே பூ மார்க்கெட் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில்,



கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட பூ மார்க்கெட் வியாபாரிகள் கடை அமைக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லாத நிலை உள்ளது. தற்போதுள்ள வாடகையை விட பல மடங்கு அதிகமாக ஒப்பந்ததாரர் வாடகை கேட்கின்றனர்.

பூ மார்க்கெட் இடிக்கப்படும்போது அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் இரு புறங்களிலும் மார்க்கெட் வைத்து கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பூ மார்க்கெட் கடைகளை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்து தாங்கள் கடை அமைத்துள்ள இடத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் மாநகராட்சி மாவட்ட கூட்டத்திலேயே மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மாநகராட்சியின் இருபுறங்களிலும் பூ மார்க்கெட் செயல்பட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தங்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டு வருகிறார்.

அதனை சட்டரீதியில் நாங்கள் அணுக உள்ளோம். அதுவரையில் தாங்கள் தற்போது உள்ள இடத்திலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது, நாங்கள் தற்போது கடை அமைந்துள்ள காட்டன் மார்க்கெட் வளாகம் வியாபாரிகளுக்கும் வந்து செல்லும் பொது மக்களுக்கும் இடவசதியாக உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்திற்கு செல்லும் பட்சத்தில் பொதுமக்கள் வந்து செல்ல நெருக்கடி ஏற்படும். மேலும் அங்கு கட்டப்பட்டு இருக்கும் கடைகள் மிகவும் நெருக்கமாக காற்று வசதி கூட இல்லாத நிலையில் கட்டப்பட்டிருப்பதால் பூக்கள் இருப்பு வைத்து விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...