கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு, மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவையில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு போக்குவரத்துக் கழகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பொது பயன்பாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகள் சார்ந்த புத்தாக்க பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை உயிர் அமைப்புடன், மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்பந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு, மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவையில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு போக்குவரத்துக் கழகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக பொது பயன்பாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகள் சார்ந்த புத்தாக்க பயிற்சி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை உயிர் அமைப்புடன், மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.