கோவை மணிஸ் மேல்நிலைப் பள்ளியிள் இன்று துவங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு


கோவை மாவட்டம், மணிஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று (8.03.2017) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் கூறுகையில், 



தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பத்தாம் வகுப்பான அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களாக கொண்டு தேர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை கல்வி மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் 34,505 மாணவ, மாணவிகளும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 8001 மாணவ மாணவிகளும் என மொத்தம் 42,505 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும், பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத கோவை கல்வி மாவட்டத்தில் 9 மையத்தில் 1,117 நபர்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 1 மையத்தில் 326 நபர்களும் என 1443 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.

இதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பிற்கு தட்கல் தேர்வு முறையில் விண்ணப்பித்து 377 நபர்கள் 3 மையங்களில் தேர்வு எழுத உள்ளார்கள்.

இன்று நடைபெறுகின்ற தேர்வு மையங்களுக்கு தேர்வுகள் முடியும் வரை மாணவ மாணவிகள் மற்றும் தேர்வு எழுதுகின்றவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும்போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மாணவ மாணவிகள் எவ்வித அச்சமின்றி சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...