உடுமலையில் 3 நாட்களாக நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டம் வாபஸ் - ஆடி, பாடி கொண்டாட்டம்!

உடுமலை அருகே தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து மலைவாழ் மக்கள் 3 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12ஆம் தேதி மலைவாழ் மக்கள் திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை சாலை அமைக்க அனுமதி வழங்காத உடுமலை வனத்துறை மற்றும் 2006 வன உரிமை சட்டத்தை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தை உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் 3வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வன உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் போராட்ட குழுவினர், வனத்துறையினர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் திருமூர்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5.37 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



பின்னர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் இனிப்புகள் வழங்கி மலைவாழ் மக்கள் பாரம்பரியமான இசைக்கருவிகள் இசைக்க மலைவாழ் மக்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த மழைவாழ் மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. உடுமலையில் மலைவாழ் மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...