ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் முதுகலை சமூகப் பணி துறையும் ரெஸ்ட் என்னும் தன்னார்வ அமைப்பும் இணைந்து பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இதில் பங்குபெற்ற பெண்களில் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். இப்பயிற்சியானது சர்வதேச பெண்கள் தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.



இதில், ரெஸ்ட் அமைப்பின் இயக்குநர் டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சியை இக்கல்லூரயின் சமூகப் பணித் துறை மாணவி வைசாலி நடத்தினார்.

இதில், சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளையல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது டி.சீனிவாசன் பேசுகையில், சுய தொழிலும், சுய வேலைவாய்ப்பும் பெண்களை தாங்கள் சொந்த காலில் நிக்க உதவுகிறது. தற்பொழுதுள்ள சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைத்து மக்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுய வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். சமகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு வேலை செய்ய வேண்டும். அல்லது சுயமாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடையும். பெண்கள் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை துவக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் முனைவோர்க்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பெண் தொழில் முனைவோர்களை உறுவாக்குவதிலும் பெரும் பங்காற்ற வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளையல் மற்றும் இதர ஆபரணங்கள்  தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலான சுயஉதவுக் குழு பெண்களும் மற்றும் இல்லத்தரசிகளும் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துகொண்டர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறையின் தலைவர் அழகர்சாமி, பேராசிரியர் மோகனப்பிரியா மற்றும ரெஸ்ட் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...