நவக்கரை அருகே இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை!

நவக்கரை அருகேயுள்ள வனப்பகுதியில் மற்றொரு விலங்குடன் நடந்த சண்டையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்த நிலையில், உடலை கைப்பற்றிய வனத்துறையினர் மருத்துவ குழுவினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்த பின் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை அடுத்த அட்டமலை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து இறந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இறந்த சிறுத்தை சுமார் 1.5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதும், வேறு ஒரு வனவிலங்குடன்ஏற்பட்ட மோதலில் சிறுத்தையின் பின்பகுதியில் கடித்து இழுத்ததில் குடல் வெளியே வந்து உயிரிழந்தது தெரியவந்தது.



மேலும் சிறுத்தையின் உடலில் ஆங்காங்கே வேறு விலங்கின் நகத்தடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இறந்த சிறுத்தை உடல் அதே அதிகாரிகள், வன ஆர்வலர்கள் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...