கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் - மீண்டும் இயக்கக்கோரி திருப்பூரில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கொரோனா காலக்கட்டத்தில் திருப்பூர் வழியாக செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னலாடை தொழில் நிறைந்த திரப்பூரில் தினந்தோறும் பணி நிமித்தமாகவும், திருப்பூரிலிருந்து ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களுக்கும் ஏராளமான பயணிகள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் முழுவதுமாக இயக்கப்படாமல் இருப்பதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் திருப்பூர் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...