உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் உயிரிழந்த சோகம்!

நேற்றைய தினம் காலை 7.40 மணிக்கு சென்னை ரயிலில் உறங்கிக் கொண்டு வந்த நபர், உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், திடீரென குதித்ததால், தவறி விழுந்து, ரயிலுக்கு அடியில் சிக்கி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர் உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 7.40 மணிக்கு சென்னை ரயில், உடுமலை ரயில் நிலையத்திற்கு வந்து நின்று புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் புறப்பட்ட நிலையில் ரயிலில் இருந்த நபர் ஒருவர், திடீரென வெளியே குதித்துள்ளார். இதனிடையே, அவர் நிலை தடுமாறில் ரயில் சக்கரத்தில் சிக்கிய நிலையில், உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலின் கடைசி பெட்டியில் பயணித்த அந்த நபர் உடுமலையை சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு வந்தவர் திடீரென உடுமலை ரயில் நிலையத்தை பார்த்தவுடன் தூக்க கலக்கத்தில் வெளியே குதித்துள்ளார்.

அப்போது ரயில் சிறிது வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகிய நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து, பழனியில் இருந்து வந்த ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...