வெள்ளகிணர் அருகே ரூ.186.34 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி - அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்!

துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, அப்பகுதியில் வரும் 2 நகர பேருந்துகளை 4ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.



கோவை: துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் ரூ.186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளகிணர் பகுதி 2-ல் மாநகராட்சியில் 1, 2, 26, 27 மற்றும் 28 ஆகிய வார்டுகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 186.34 லட்சத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பகுதி செயலாளர் அருள்குமார் தலைமையில் நடந்த பூமிபூஜை நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், அவுசிங் யூனிட் பகுதி 2க்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த நான்கு டவுன் பஸ்சில் தற்போது இரண்டு தான் வருவதாகவும், அதுவும் முக்கிய நேரங்களில் வருவதில்லை என்றும் பள்ளி மாணவர்கள் வசதிக்காக டவுன்பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், ஆணையாளர் பிரதாப், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழக செயலாளர் சிவா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் ஆறுகுட்டி, மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜசேகர், சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, அம்பிகா தனபால், சித்ரா வெள்ளியங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, நிர்வாகிகள் முன்னால் அவைத் தலைவர் வெ.நா.பழனியப்பன், பகுதி கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், இராக்கிமுத்து, அருண், சம்பத், தன்ராஜ் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சுப்ரமணியன், ரம்யா, வட்டக் கழக செயலாளர்கள் இராஜசேகரன், சண்முகம், சோமசுந்தரம், சுந்தரம். மற்றும் வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...