டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யூடியூபர்களிடம் போலீசார் விசாரணை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட ‘பேசு தமிழா பேசு’ யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யூடியூபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடுதல் டிஜிபி அருண் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் அவருக்கு தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த எட்டு பேருக்கு மாநகர போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.

இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்கு ஆஜராக கூறிய நிலையில், இன்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...