எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் - திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க பெங்களூருவுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பாமல் கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் அரசோடு இணக்கமாக செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



திமுக அரசின் இரட்டை வேடம் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பாஜகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

மத்திய அரசில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரை சம பங்கீடாக வழங்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு 177 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அதற்காக ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என தேர்தல் வாக்குறுதியிலேயே காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல், இன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசாமல் கூட்டணி என்ற பெயரில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசோடு இணக்கம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதே நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி பாஜக போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...