ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பூர்: ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் அன்னதான விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பூரில் ரயில் நிலையம் அருகே உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கல்வி நிலை குழு தலைவர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பணிகள் குழு தலைவர் பி.ஆர்.செந்தில்குமார், மாவட்ட திமுக நிர்வாகி திலக்ராஜ் ரீனா கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.